மைனர் பெண் 4 மாதம் கர்ப்பம் வாலிபருக்கு போலீஸ் வலை செய்யாறு அருகே

செய்யாறு, ஜூலை 16: செய்யாறு அருகே மைனர் பெண்ணை 4 மாதம் கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ்(22), பெங்களூருவில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் 17 வயது மைனர் பெண்ணுடன் கடந்த 6 மாதங்களாக நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி மைனர் பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது கர்ப்பத்திற்கு காரணம் சரண்ராஜ் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் நேற்று முன்தினம் செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சரண்ராஜை தேடி வருகிறார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை