மைதானத்தில் இறைவணக்கம் செய்தபோது மாணவிகள் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தினமும் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இறைவணக்கம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை பள்ளி மைதானத்தில் இறைவணக்கம் நடைபெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த மரத்தின் கிளை ஒன்று திடீரென முறிந்து 11ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வரும் 7 மாணவிகள் மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். உடனே அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் மரம் விழுந்து காயமடைந்த 7 மாணவிகளை மீட்டு கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல் உதவி கிகிச்சை அளித்தனர். நல்வாய்ப்பாக அவர்களுக்கு ரத்த காயங்கள் எதுவும் ஏற்பட வில்லை. இருப்பினும் தலையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்டறிய 7 மாணவிகளுக்கு ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதை தொடர்ந்து 7 மாணவிகளுக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதுகுறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை