பொன்னை: மேல்பாடி அருகே சாலையோரம் முட்புதர்கள் சூழ்ந்து கிடப்பதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்பாடி அடுத்த கொக்கேரி ராமாபுரம் செல்லும் சாலை, விண்ணம்பள்ளி குண்டலூர் செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இச்சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்கள் அகற்றாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் புதர் மண்டி, விஷப்பூச்சுகள், விஷ ஜந்துக்கள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே தற்போது பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்….