மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு

சேந்தமங்கலம், ஜூன் 11: எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சியில், ஒன்றிய பொது நிதியில் இருந்து ₹10 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பிடிஓ.,க்கள் மகாலட்சுமி, சுகிதா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வட்டார அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலா சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், முத்துக்கருப்பன், விமல், மகாமுனி,பெருமாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி