மேலூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம் நாளை நடக்கிறது

மதுரை, ஏப்.4: மதுரை மாவட்டம் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நாளை (ஏப்.5) நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேலூர் ஆர்டிஓ தலைமை தாங்கி மனுக்களை பெறுகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வருவாய் வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுவுடன், மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என மேலூர் ஆர்டிஓ பிர்தவுஸ் பாத்திமா தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்