மேலூர் நகராட்சியில் அதிமுக வெற்றி வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர் பிரபு 446 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் குணா 431 வாக்குகள் பெற்றார். 1வெற்றிச் சான்று பெற்ற இவர், மதுரை வந்து அமைச்சர் பி.மூர்த்தியை சந்தித்து பேசினார். பின்னர் அவரது முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அருண் சுந்தர் பிரபு பேட்டியில், ‘‘அதிமுகவில் இருப்பதை விட திமுகவில் இருந்தால், மக்களுக்கான பல்வேறு பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என்பதால்தான் இணைந்தேன்’’ என்றார். மேலூர் நகராட்சி 27 வார்டுகளிலும் அதிமுக போட்டியிட்ட போதிலும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் ஒருவர் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!