Thursday, June 27, 2024
Home » மேலப்பாளையத்தில் தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்

மேலப்பாளையத்தில் தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்

by Karthik Yash

நெல்லை, நவ. 10: மேலப்பாளையத்தில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மேலப்பாளையம் அப்துல்காதர் மகன் இம்ரான் நசீர். இவரது மனைவி முபினா பேகம் (22). இவர் கடந்த 6ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தோழி வீட்டிற்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இம்ரான்நசீர் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், மாயமான முபினா பேகத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi