சங்கரன்கோவில், ஜூலை 27: தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனையின் படி, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகோவிலான்குளம் கிராமத்தில் பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நியாயவிலை கடையை அகற்றிவிட்டு புதிதாக நியாயவிலை கடை கட்ட நிதி வழங்க வேண்டும் எனவும், சின்னகோவிலான்குளம் கிராமத்தில் சுயஉதவி குழு கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைக்கு, புதிய கடை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோரிடம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். நிகழ்வின் போது மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெள்ளத்துரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.