மேலடுக்கில் நிலவும் காற்று திசை மாறுபாடு காரணமாக 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை, : 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில  இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் அடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில்  இருந்து மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசும். லட்சத்தீவு, கேரளா, அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று  55 கிமீ வேகத்திலும், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  50 கிமீ வேகத்திலும்  வீசும். அதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்