மேற்கு மாவட்டம் சார்பில் 30ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

திருச்செங்கோடு: சேலத்தில் நடக்கவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டில், நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் அறிமுக விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலை வைத்தார். கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம், 1 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வாழ்வாரத்தை மேம்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி, அனைத்து வீடுகளுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு