தஞ்சாவூர், ஜூலை16: தஞ்சை மாநகர மேயர் சன் ராமநாதன் பிறந்தநாளை முன்னிட்டு பசுமை தஞ்சை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள், பகுதி கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பசுமை தஞ்சை அமைப்பு சார்பல் நிர்வாகிகள் ராணிகண்ணன், பொன்னி உதயகுமார், ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.