மேம்பால சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்த கார்: மாணவர்கள் தப்பினர்

அண்ணாநகர்: அமைந்தகரை மேம்பால சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்த்தவர் வனிஷ் (20). சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன்  காரில் சினிமாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அமைந்தகரை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி பாலத்தின் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வனிஷ் மற்றும் அவரது நண்பர்கள் காரில் சிக்கி தவித்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று  காரில் சிக்கியிருந்த 3 மாணவர்களையும் மீட்டனர். அதிஷ்டவசமாக 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கவிழ்ந்து கிடந்த காரை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை