மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக சரிவு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 57 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் காலை 9 மணி அளவில் 50 ஆயிரம கனஅடியாக குறைந்தது. நீர் வரத்து சரிந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 50,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 27,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது….

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்