மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 2: கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை மத்திய ,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உழவர்குடி தமிழர் திரள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் நிறுவனர் சீர்.தங்கராசு தலைமை தாங்கினார். தமிழ் தேச தன்னுரிமை கட்சித்தலைவர் வியனரசு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சோழ மண்டல செயலாளர் வீரமுத்து, காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் சோழன், மூவேந்தர் அனைத்து கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் தலைவர் கனகராசு, காவிரி டெல்டா விவசாய சங்கம் ரவிச்சந்தர் மற்றும் ஏராளமான விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை