Monday, July 1, 2024
Home » மெட்ரோ ரயில் பணி காரணமாக போரூர் – பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

மெட்ரோ ரயில் பணி காரணமாக போரூர் – பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

by kannappan

சென்னை: போரூர்-பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 26ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் முறையிலும், பின்னர் 2 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை மவுண்ட் பூந்தமல்லி -ஆவடி சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போரூரிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி -ஆவடி சாலையில் பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு  பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, சவீதா பல் மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல்மருத்துவமணை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமனை, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடதுபுறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்.பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிப்பதற்காக முழு ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையாளர் ஆவடி போக்குவரத்து அவர்களின் இணையதள முகவரியான dcpavadi.traffic@gmail. மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான com sundramoorthyb@kecrpq.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம். மேலும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து கைப்பேசி எண்.8056217958 மற்றும் காவல் ஆய்வாளர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போக்குவரத்து கைப்பேசி எண். 9498141613 மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண். 7305715666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

5 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi