Sunday, June 30, 2024
Home » மெட்ரோ ரயிலின் 4ம் வழித்தடத்தில் உள்ள 7 கோயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மெட்ரோ ரயிலின் 4ம் வழித்தடத்தில் உள்ள 7 கோயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

by kannappan

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 4ம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி வெங்கீஸ்வரர் கோயில், வடபழனி அழகர் பெருமாள் கோயில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் கோயில் குளம், புராதன கோயில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.இந்நிலையில், இந்த கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி  சென்னையை சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை.100 ஆண்டுகளுக்கு மேலான கோயில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்காததால் மெட்ரோ ரயில் 4 வது வழித்தடத்தில் உள்ள கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை.பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோயில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்தால் பாதிக்கப்படும் 7 கோயில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில், வணிக பயன்பாட்டுக்கான பயன்படுத்தப்பட்ட  கோயில் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று கோரப்பட்டது.  நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்….

You may also like

Leave a Comment

19 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi