Saturday, October 5, 2024
Home » மூன்றாம் அலைக்கு தயாராவோம்!

மூன்றாம் அலைக்கு தயாராவோம்!

by kannappan

மூன்றாவது அலை விரைவில் நெருங்கி வருகிற நிலையில் நமது வாழ்க்கையிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று விரைவாக வெளியேறப் போவதில்லை என்பது மிகவும் தெளிவாக தெரிய வந்திருக்கிறது. மூன்றாம் அலைக்குப் பின் நான்காவது, ஐந்தாவது அலையும் வரலாம். எனவே, கொரோனா குறித்து அச்ச உணர்வு கொள்வதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் எத்தனை அலைகள் வந்தாலும் எதிர்கொள்ளலாம். மூன்றாம் அலை வந்துவிடுமோ என்று பதற்றத்தில் இருப்பதைவிட வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தை உலகெங்கிலும் மக்கள் அனுபவித்திருக்கிற நிலையில், இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிலிருந்து மீள்வதற்கும் மற்றும் அவர்களது நோயெதிர்ப்புத்திறன் அமைப்பை மறு உருவாக்கம் செய்யவும் வழிகளை கண்டறிய வேண்டியிருக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் அன்றாட உணவுமுறையில் சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். நமது உடலில் நோயெதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களுள் ஒன்றாக வைட்டமின் சி கருதப் படுகிறது. ஆரஞ்சு / எலுமிச்சை பழங்கள் மற்றும் தக்காளி போன்ற வைட்டமின் சி செறிவாகவுள்ள உணவுப்பொருட்கள் இதய செயல்பாட்டை சீராக வைக்கவும், வெள்ளை அணுக்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. அதேபோல் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானதாகும். இந்த முக்கியமான நோயெதிர்ப்புத்திறன் உட்பொருள் குறைவாக இருப்பது தன் தடுப்பாற்றல் நோய்களுக்கு வழிவகுக்கும் மற்றும் தொற்றுகள் பாதிக்கக்கூடிய நிலையை அதிகரிக்கும். யோகர்ட், செறிவூட்டப்பட்ட பால் போன்றவற்றை உட்கொள்வது வைட்டமின் டி பற்றாக்குறையைத் தடுக்கும். மஞ்சள் எண்ணற்ற தலைமுறைகளாக பல்வேறு கலாச்சாரங்களிலும் ஒரு கிருமிநாசினியாக, நோய்களை அழிக்கும் மருந்துப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதற்குள் இருக்கும் குர்குமின்(Curcumin) என்ற உட்பொருள், மஞ்சளுக்கு அதன் அழற்சி எதிர்ப்புத்திறனை தருகிறது. பைப் பரின்(Piperine) என்பதை உள்ளடக்கிய கருப்பு மிளகுடன் சேர்த்து மஞ்சளை பயன்படுத்தும்போது இன்னும் திறனுள்ளதாகவும், பயனளிப்பதாகவும் இருக்கிறது. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸானது நோயெதிர்ப்புத்திறன் ஆரோக்கியத்திற்கும் மற்றும் நோய் வராமல் தடுப்பதற்கும் அத்தியாவசியமானது. வைட்டமின் டி பற்றாக்குறை, நோயை எதிர்த்துப்போரிடுகிற நமது உடலின் திறனை குறைத்துவிடும்.இலைகள் உள்ள பசுமையான காய்கறிகள்: கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. ரத்த அணுக்கள் மீண்டும் உருவாவதற்கும் மற்றும் உயிர்வளியேற்ற அழுத்தத்தை குறைப்பதற்கும் இவைகள் பங்களிப்பை வழங்குகின்றன. சல்போரபேன் (Sulforaphane) என்பது பிராக்கோலி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், மற்றும் கிளைகோஸ் (பிரஸல் ஸ்ப்ரவுட்ஸ்) போன்ற காய்கறிகளில் காணப்படுகிற ஒரு வேதிப்பொருளாகும். நோயெதிர்ப்புத் திறனை இது மேம்படுத்துகிறது.தசை பழுதுநீக்கலுக்கும், சுவாசப்பாதை அமைப்பின் தொடர் செயல்பாட்டுக்கும் புரதங்கள் அத்தியாவசியமானவை. கோழி / பறவை இறைச்சி, பன்னீர், பட்டானி மொச்சை, சோயா ஆகியவை புரதச்சத்து அதிகமாகவுள்ள உணவுப் பொருட்களாகும். நமது உடற்தசையின் புரத கூட்டுவினையை மேம்படுத்த ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதற்குப் பதிலாக நாள் முழுவதும் வெவ்வேறு காலஅளவுகளில் புரதத்தை உட்கொள்ள வேண்டும்.மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்துக்கள், நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் பதில்வினைகளை மேம்படுத்துகின்றன. இந்த ஊட்டச்சத்துக்களை, ஆரோக்கியமான உணவுகள் வழியாக அல்லது சப்ளிமென்ட் என அழைக்கப்படும் உணவு துணைப்பொருட்களை உட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மருத்துவரால் வேறு விதத்தில் அறிவுறுத்தப்பட்டாலொழிய உணவு துணைப்பொருட்களுக்குப் பதிலாக இயற்கையான உணவு ஆதாரங்களிலிருந்து இத்தகைய ஊட்டச்சத்துக்களை பெறுவதே சரியானதாகும்!

You may also like

Leave a Comment

5 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi