மூதாட்டி மீது டூவீலர் மோதல் தட்டிக்கேட்டவரை தாக்கிய தந்தை, மகன் கைது

மதுரை, ஏப். 6: பேரையூர் தாலுகா பி.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (31). இவர், எல்லீஸ் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசரடி, டி.பி.பிரதான சாலையில் நடந்து சென்றார். அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம், பிரசாந்துக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது மோதியது. இதில் காயமடைந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் பிரசாந்த் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.பின்னர் டூவீலரின் சாவியை பிரசாந்த் எடுத்து வைத்துக்கொண்டார்.

இதனால், ஆத்திரமடைந்த அதில் வந்த தினேஷ்குமார் என்ற வாலிபர் இதுகுறித்து அவரது தந்தை தக்காளி பாபு (47) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தக்காளி பாபு, தனது மகன் தினேஷ்குமாருடன் சேர்ந்து பிரசாந்த்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் பிரசாந்த் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார், தக்காளி பாபு மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை