விருதுநகர், செப்.6: 80 வயது மூதாட்டில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது தாய் அமராவதி(80), பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். வீட்டு வராண்டாவில் தங்கியிருந்த அமராவதி, நேற்று முன்தினம் காலை ஊர் பொதுக்கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். ஆமத்தூர் போலீசில் ஜீவானந்தம் புகார் அளித்தார். போலீார் விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி தற்கொலை
previous post