மூதாட்டியை தாக்கிய கும்பல்

 

ஆத்தூர், மே 8: ஆத்தூர் நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள்(60). இவரது மகன் ராஜேந்திரன். இவருக்கும், இவரது அண்ணன் கணேசன் குடும்பத்தாருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த அன்னம்மாளிடம், கணேசன் மகன் சுரேஷ்(38) மற்றும் முருகேசன்(32) மற்றும் 2 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை தாக்கியதோடு தலைமுடியை வெட்டி, கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அவரது மகன் ராஜேந்திரன் ஓடிவந்த போது, அவரையும் அந்த கும்பல் தாக்கினர். அப்போது, அக்கம்பக்கத்தினரை பார்த்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அன்னம்மாள் மற்றும் ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னம்மாளிடம் வாக்கு மூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ் மற்றும் முருகேசன் உள்ளிட்ட 7 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்