நாமக்கல், நவ.9: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (70). இவர் நாமக்கல் முல்லைநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, நேற்று காலை கொல்லிமலைக்கு செல்ல நாமக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார். பின்னர், பஸ்சில் ஏற முயன்ற போது, ஒருவர் கண்ணம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணம்மாள், திருடன் என சத்தம் போட்டு அலறவே, அங்கிருந்தவர்கள் அந்த நபரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியிடம் 7 பவுன் சங்கலி பறித்தவர் கைது
previous post