மூதாட்டியிடம் தாலிச்செயின் பறிப்பு

தஞ்சாவூர், செப். 14: தஞ்சாவூரில் மூதாட்டியிடம் தாலிச்செயினை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உஷா (60). கடந்த 10ம் தேதி இரவு தனது கணவருடன் உஷா பைக்கில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பைக்கில் நின்றிருந்த மர்மநபர்கள் 2 பேர், உஷா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். அதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கிழக்கு போலீசில் உஷா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி