மூணாறு அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானை கூட்டம்: தொழிலாளர்கள் அச்சம்

 

மூணாறு, அக்.1: மூணாறு லாக்காடு எஸ்டேட் பகுதியில், உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடலார், நல்லதண்ணி எஸ்ட்டேட் பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானை கூட்டம் தேயிலை தோட்டத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை விரட்டுவதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லாக்காடு எஸ்டேட் பகுதியில், குடியிருப்புகளின் அருகே குட்டியுடன் மூன்று யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், உடனடியாக காட்டு யானைகளை விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி