முள்ளிக்கொரை சாலையை சீரமைக்க கோரிக்கை

 

ஊட்டி, நவ. 24: ஊட்டி அருகே உள்ள முள்ளிக்கொரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துள்ளனர். ஊட்டி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, ஊட்டியில் இருந்து முள்ளிக்கொரை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களிலும் சாலை பழுதடைந்து உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை