முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘

ஸ்பிக்நகர், மே4: வைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஆனந்தராஜ் (27). இவர் உறவினர் அழைப்பின் பேரில் முள்ளக்காடு அருகே உள்ள கக்கஞ்சிநகர் கோயில் திருவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது ஆனந்தராஜுக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்கள் ஆனந்தராஜை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த ஆனந்தராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்