முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 139 அடி வரை தண்ணீர் தேக்கும் இடைக்கால உத்தரவு தொடரும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மனுதாரர்களின் குற்றச்சாட்டில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது 139 அடி வரை தேக்கலாம் என்ற நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்க முறைகள் சரியாக இல்லை என ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அணை இயக்க முறையின் நிலை அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மனுதாரரின் குற்றச்சாட்டில் அறிவியல் பூர்வமான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. எங்கள் உரிமையில் கேரள அரசு தலையிடக் கூடாது என தமிழக அரசு 19ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கேரளாவை சேர்ந்த பெரியார் பாதுகாப்பு குழு மற்றும் ஜாய் ஜோசப் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அணை நீர் கசிவு  தொடர்பான தரவுகள் வழங்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி, ‘முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து தரவுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கேரள அரசுக்கும் தரவுகள் வழங்கப்படுகிறது. அவர்களும் அதனை கண்காணித்து கொண்டு இருக்கின்றனர். எனவே, மனுதாரர்களின் இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் அதனை தொடர்ந்து கூறி வருகின்றனர் என வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு மற்றும் ஒன்றிய நீர் ஆணையம் நடத்திய ஆலோசனையின்படி மழைக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் 139 அடி நீரை தேக்க வேண்டும் என்ற முந்தைய இடைகால உத்தரவு என்பது தொடரும். மேலும் இதுகுறித்து நேரடி விசாரணையின்போது விரிவாக விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் அடுத்த விசாரணையை வரும் டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு