சென்னை: கோயிலைகளையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் குத்தகை நிலத்திற்கு ரூ.3 கோடி அளவு பாக்கி வைத்திருப்பதாக கோயிலின் இணை ஆணையர் அனுப்பியுள்ள நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நோட்டீஸ் சரியானது என்பதால் வாடகையை செலுத்த கிளப்புக்கு நீதிபதி எஸ்,எம்,சுப்ரமணியம் கூறியுள்ளார். …