முருகன் கோயில்களில் ஆனி கிருத்திகை வழிபாடு

பரமத்திவேலூர், ஜூலை 4: ஆனி மாத கிருத்திகையையொட்டி பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தியை அடுத்துள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோயில், வேலூர் பேட்டை முருகப் பெருமான், நன்செய் இடையாறு சுப்பிரமணியர் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலை சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் முருகப்பெருமானுக்கு கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பத்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை