முன்விரோத தகராறில் பெண்ணை சரமாரி தாக்கிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி அடுத்த சின்னபெல்லாரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சுமா (33). மாதுவுக்கும், அவரது தம்பி நஞ்சுண்டனுக்கும் இடையே நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி மாலை நஞ்சுண்டன், மாதுவின் வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டி தீ வைத்துள்ளார். இதனை வீட்டில் இருந்த சுமா தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நஞ்சுண்டன், அவரது மனைவி அமிர்தா, நண்பர் வடிவேல் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர், சுமாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சுமா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து நஞ்சுண்டன், வடிவேல் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை