முன்விரோதம் காரணமாக கத்திக்குத்து 6 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்த 3 பேர் கைது

மதுரை, செப். 24: தகராறால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 6 ஆண்டுகள் வரை காத்திருந்து பழி தீர்த்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை விளாங்குடி சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் பழனிக்குமார்(32). இவர் அப்பகுதியில் பால்மாடு வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாத்(33), பிரசாந்த் என்ற பவர் பிரசாந்த்(30), ஜெயசூர்யா(30). இவர்கள் கடந்த 2018ல் நடந்த தகராறில் பழனிக்குமாரை தாக்கியுள்ளனர். அதிலிருந்து பழனிக்குமாருக்கும் அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 22.9.2024 அன்று விளாங்குடி சாவடி முன்பாக நின்றிருந்த பழனிக்குமாரை, அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து தாக்கியதுடன், கத்தியால் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த பழனிக்குமாரின் தாயார் இந்திராவையும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனிக்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து பிரசாத் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். முன்விரோதத்தில் 6 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்