Thursday, June 27, 2024
Home » முன்விரோதத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல்

முன்விரோதத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல்

by Karthik Yash

உடன்குடி, ஜன. 6: மெஞ்ஞானபுரம் அருகே சீர்காட்சி அம்மன்புரம் சூரியகாந்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி ஸ்டெல்லா(55). தம்பதியினர் அம்மன்புரம் பஸ்ஸ்டாப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே ஊரை சேர்ந்த சின்னத்துரை மகன் முருகானந்தன்(25), பஸ்ஸ்டாப் பகுதியில் மது குடித்துள்ளார். இதனை டீக்கடைக்காரர் சின்னத்துரை கண்டித்துள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்படவே டீக்கடை சின்னத்துரை மகன் ரமேஷ் தட்டிக்கேட்டார். இதில் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், கடந்த 31ம் தேதி ரமேசிடம் முருகானந்தன் தகராறு செய்து கறுக்கு மட்டையால் தாக்கினார். தடுக்க சென்ற அவரது தந்தை சின்னத்துரையையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஸ்டெல்லா அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் எஸ்ஐ விஜயதாஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

You may also like

Leave a Comment

fifteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi