ஓசூர், செப்.13: ஓசூர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன், மாநில ஐஎன்டியுசி செயல் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மீண்டும் தமிழ்நாடு ஐஎன்டியுசி மாநில செயல் தலைவராக நியமித்து, ஐஎன்டியூசி தேசிய தலைவர் சஞ்சீவிரெட்டி அறிவித்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ மனோகரனுக்கு, மாநில அமைப்பு செயலாளர் முனிராஜ், மூத்த துணை தலைவர் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் பக்தவத்சலம், அலுவலக செயலாளர் கோதண்டராமன், துணை பொது செயலாளர் ராஜேந்திரன், செயலாளர்கள் சுந்தர்ராஜ், அருள் மூர்த்தி, பொருளாளர் பரமானந்த பிரசாத், இ.எஸ்.ஐ கமிட்டி சிவக்குமார், நிர்வாகிகள் பாரதி, சுகுணா, லட்சுமிதேவி உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தேசியத் தலைவர் சஞ்சீவிரெட்டிக்கு நன்றி தெரிவித்தனர்.