முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 26வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிக்கை

 

விருதுநகர், ஜூலை 28: விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் அறிக்கை: விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையாரும், விருதுநகர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான மறைந்த வே.தங்கப்பாண்டியன் நினைவு நாளான 31.7.2023 காலை 9 மணிக்கு மல்லாங்கிணற்றில் உள்ள மறைந்த வே.தங்கப்பாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

அது சமயம் சட்டமன்ற உறுப்பினர்கள், தெற்கு, வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக பிற அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முந்நாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் ஊர்வலமாக இல்லாமல் தனித்தனியே தங்களது அஞ்சலியை செலுத்த செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்