முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் 10ம்தேதி மின்தடை

தூத்துக்குடி, அக்.7: தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் வருகிற 10ம்தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி முத்தையாபுரம் உபமின் நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் முத்தையாபுரம் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசரகால பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 10ம்தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின்தடை செய்யப்படும். இதன்படி முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரபட்டி, அனல்மின் நகர் பகுதி, கேம்ப்-1ஐ சுற்றியுள்ள பகுதிகள், கேம்ப்-2 பகுதிகள், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்குதெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம், கால்டுவெல் காலனி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை