முத்தூரில் தேங்காய், கொப்பரை ஏலம்

வெள்ளகோவில், ஏப்.16: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 23 பேர், நேற்று விற்பனை கூடத்திற்கு 3758 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 26.85 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 25.85 ரூபாய்க்கும் ஏலம் போனது. 1.6 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.39 ஆயிரத்துக்கு ஏலம் போனது என, விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார். முத்தூரில் கொப்பரை ஏலம்:முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.41 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடந்தது.முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில் 1953 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 80.70 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1953 கிலோ கொப்பரை, ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்