முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

 

முத்துப்பேட்டை, ஜூன் 19: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து மகன் பாலசுப்பிரமணியன் (60). விவசாயி. இவருக்கு உடல்நல குறை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணியன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் ஆபத்தான நிலையில் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பாரதிதாசன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்.இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உயிரிழந்த பாலசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனு ப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு