முத்துப்பேட்டை, ஆக. 4: முத்துப்பேட்டை அருகே உயர் கோபுர மின் விளக்கு சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலை பைபாஸ் ரவுண்டானாவில் ஒரு உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அப்பகுதிக்கு இரவில் மிகவும் பயனாக இருக்கும் இந்த உயர கோபுர விளக்குக்கு சாலை தெற்கு பகுதியிலிருந்து வயர் இழுத்து மின் சப்ளை வருகிறது. இந்த உயர கோபுர விளக்கு கீழ் பகுதியில் மின் விளக்கை இயக்கும் ஆன், ஆப் சுச் மற்றும் பீஸ் கேரியல் பாக்ஸ் ஒன்று உள்ளது.
தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த பாக்ஸ் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. மேலும் மின் வயர்களும் ஆபத்தான நிலையில் தாழ்வாக தொங்கி வருகிறது. இதனால் ஆபத்தை உணராத சிறுவர்கள் விளையாட்டாக தொட வாய்ப்புகள் உள்ளது அப்படி தொடும் பட்சத்தில் உயிர் பலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து இந்த உயர கோபுர விளக்கை சிரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.