முத்துப்பேட்டை, ஜூலை 2: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காலனிதெருவை சேர்ந்தவர் வீராச்சாமி மகன்கள் சுப்பிரமணியன் (50), பூமிநாதன் (45). சகோதரர்கள். இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே வேலி தகராறு நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் தம்பி பூமிநாதன், அண்ணன் சுப்பிரமணியத்தை கட்டையால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுப்பிரமணியன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சுப்பிரமணியனை தாக்கிய பூமிநாதனை நேற்று கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
முத்துப்பேட்டை அருகே அண்ணனை தாக்கிய தம்பி கைது
previous post