பெரம்பலூர், ஜூன் 14: பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத் தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் இயங்கி வரும் குழந்தை கள் மையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், குழந் தைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேற்று (12ம் தேதி) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குழந்தைகளின் எடை சராசரி கால இடை வெளியில் பரிசோதிக்கப் படுகிறதா, அரசின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப்பொருட்கள் போதுமானதாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா என மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டார். மேலும் அந்தக் குழந்தைகள் மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களின் விவரம் முறையாக பராமரிக்கப்படுகிறதா கர்ப்பிணி தாய் மார்களுக்கு வழங்கப்படும் சத்துப் பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, வட்டார அலுவலர் திருமதி பிரேமா மற்றும் பலர் உடன் இருந்தனர்.