முதியவர் மாயம்

ஈரோடு, ஆக.18: கொளப்பலூர் அடுத்துள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (69). இவர் கடந்த 29ம் தேதி வீட்டில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணிக்கம் குறித்த எவ்வித தகவலும் கிடைக்காததால் சிறுவலூர் போலீசில் மகன் கார்த்திகேயன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி