Wednesday, July 3, 2024
Home » முதியவர் தூக்கிட்டு தற்கொலை

முதியவர் தூக்கிட்டு தற்கொலை

by Dhanush Kumar

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் அவரது 2 முழங்கால்களிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால், தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில், மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24ம் தேதி இரவு மணி தனது வீட்டினுள் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து, பெருந்துறையில் வசித்து வரும் அவரது மகள் நந்தினிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi