முதியவர் தற்கொலை

 

கோவை, அக். 23: கோவை ஆர்.எஸ்.புரம் நாதன்நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (79). சமையல் காண்டிராக்டர். இவர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விரக்தியடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு