தேவாரம், ஆக. 19: தேவாரம் அருகே உள்ள பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (82). இவருக்கு வயது மூப்பின் காரணமாக உடலில் பல்வேறு நோய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் குணமாகவில்லை. இதனால், மனவேதனை அடைந்த சுந்தர்ராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிசசை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து கோம்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
previous post