முதியவர் தற்கொலை

 

கமுதி, ஜூன் 19: கமுதி அருகே வங்காருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன்(50). குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மன வேதனையில் விஷம் குடித்ததாக தெரிய வந்தது. உடனடியாக பரமக்குடி அரசு மருத்து மனைக்கு கொண்டு செல்லப்பட்ட, ஆனந்த கிருஷணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மகன் குணசேகரன் அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை