முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அடுத்த பண்ணைக்காடு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன் தினம் சாலையோரம் ரத்த காயங்களுடன் இறந்து இறந்தார். இதனைப் பார்த்த பகுதி பொதுமக்கள் அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் இறந்தவர் பொன்நகர் சூர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்த வேல் நாடார் (83) என்பதும், இவர் அப்பகுதியில் பழம் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், வேல்நாடார் மர்ம நபர்களால் இரும்பு கம்பியால் கழுத்து, கண் பகுதியிலும் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் மாயமானதால், அவர் அணிந்திருந்த தங்க மோதிரத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அவிநாசிபாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்