முதியவரை தாக்கியவர் கைது

கருங்கல், ஜூலை 19: கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(71). சம்பவத்ததன்று அதேபகுதியில் உள்ள டீ கடையில் வைத்து தட்டான்பறம்பு விளை பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் ஆன்றனி என்பவரது மகனுக்கும், கிருஷ்ணனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் வர்க்கீஸ் ஆன்றனியும், அவரது மகனும், கிருஷ்ணனது வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த கிருஷ்ணன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கருங்கல் போலீசார் தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்து, வர்க்கீஸ் ஆன்றனியை கைது செய்தனர். அவர் முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்