முதியவரை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

திருவாடானை, ஆக. 9:திருவாடானை பாரதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (59). அதே ஊரைச் சேர்ந்த இளங்கோவனுக்கு ரூ.40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை சுப்பிரமணியன் திரும்ப கேட்டபோது வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று இளங்கோவன் கூறியுள்ளார். இதை எடுத்து பணத்தை வசூல் செய்ய சென்ற சுப்பிரமணியனை இளங்கோ அசிங்கமாக பேசிகொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த கத்தியால் வெட்டியதில் சுப்பிரமணியனுக்கு கை விரல்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுப்பிரமணியன் திருவாடானை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கோவனை தேடி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்