Sunday, June 30, 2024
Home » முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள்

முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள்

by kannappan

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2022ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய சொத்து வரி வீதம் மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். எனவே 2022 முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே இன்றுக்குள்  செலுத்தலாம் என ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல்  ஏப்ரல் 15க்குள் (இன்று) சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும். தவறும் நபர்களுக்கு 2% தண்ட தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை,  மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம்,  நம்ம சென்னை செயலி, பேடிஎம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின்  வாயிலாகவும், சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், உரிமம் ஆய்வாளர்கள்  வாயிலாகவும்  செலுத்தலாம்.மறுசீராய்விற்கு பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சொத்து உரிமையாளர்கள் 2022-23ம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான மீதமுள்ள சொத்து வரியினை செலுத்தலாம். சென்னை மாநகராட்சிக்கு இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமாக சொத்துவரி செலுத்தும்போது, ஏதேனும் குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படின், சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யவும். அதனடிப்படையில் தீர்வு செய்யவும் தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi