முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் 3 பேர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வை சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவரும், வெம்பாக்கம் ஒன்றிய துணைச் செயலாளருமான மாமண்டூர் டி.ராஜீ தலைமையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியக்குழு கவுன்சிலர்களான ஒன்றிய மீனவர் அணி செயலாளர் நாட்டேரி சம்பத்து – ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் ராந்தம் குணா – வடஇலுப்பை கவிதா ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இதேபோல், அதிமுகவை சேர்ந்த 8 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த 7 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் எ.வ.வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் க.பொன்முடி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஓ.ஜோதி, எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை