சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவை ஒட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்தடைந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த பினராயி விஜயனை, அமைச்சர்கள் பொன்முடி, எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி, என்.ஆர். இளங்கோ ஆகியோர் வரவேற்றனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாலை வெளியிட உள்ளார். நூல் வெளியீட்டு விழாவில் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்றை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். சென்னை – நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு உங்களில் ஒருவன் புத்தக வெளியிட்டு விழா நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசுகிறார். விழாவின் நிறைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்ற உள்ளார்….